search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர் தாக்குதல்"

    புதுவை அண்ணா சாலையில் மழைக்கு ஒதுங்கி நின்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பாகூர் புதுநகரை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை புதுவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார்.

    அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளேயே தகராறு செய்து இடித்து தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் ஜெயபிரசாத் மீது விழுந்தார். இதனை ஜெயபிரசாத் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து ஜெயபிரசாத்தை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த ஜெயபிரசாத் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, போலீஸ் ஏட்டு ஜெய்கணேஷ் ஆகி யோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அங்குள்ள ஆட்டோ ஸ்டேண்டுக்கு சென்று ஜெயபிரசாத்தை தாக் கிய கும்பல் குறித்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஜெயபிரசாத்தை தாக்கியவர்கள் கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த கலையரசன் (23), கோவிந்தசாலையை சேர்ந்த சாமிக்கண்ணு (30), பிரான்சிஸ் ரெமோ (28) மற்றும் பூனை மணி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கவியரசன், சாமிக்கண்ணு, பிரான்சிஸ் ரெமோ ஆகிய 3 பேரை கைது செய்தனர். பூனை மணியை தேடி வருகிறார்கள்.

    ×